பீதியை கிளப்பும் நிபா வைரஸ்.. வெளியான திடுக்கிடும் தகவல் | Nipah Virus | Kerala

x

கேரளாவில் நிபா வைரஸால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மலப்புரம் மாவட்டம், நடுவத்து பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர், காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தங்கியிருந்த பகுதி, மருத்துவமனையில் உடனிருந்த ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் என 20 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 20 பேருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், அந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த மேலும் 267 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்