சுற்றுலா சென்ற சிறுவனை பிடித்த வினை.. உடனிருந்த 214 பேரின் நிலை என்ன? - பீதியில் மொத்த கேரளா

x

கேரளாவில்15 வயது சிறுவனுக்கு நிபா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து சிறுவனுடன் தொடர்பில் இருந்த 214 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கேரளாவில் மீண்டும் நிபா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மலப்புரம் பாண்டிக்காட்டைச் சேர்ந்த 15 வயது சிறுவன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தநிலையில், அவனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நிபா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்த சிறுவன் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவன் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பகுதியில் இருந்து வைரஸ் தாக்கியதாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவன் வசிக்கும், பாண்டிக்காடு, அனகாயம் ஊராட்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்