ஒலித்த தேசிய கீதம்;செல்போனில் பேசி கொண்டிருந்த சபாநாயகர் அடுத்த நொடியே தமிழிசை செய்த செயல்

x

நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, சபாநாயகர் செல்வம் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனை அருகில் இருந்து கவனித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சபாநாயகரை செல்போன் அழைப்பை துண்டிக்க சொன்னார். பின்னர், சபாநாயகர் செல்வம், செல்போனில் பேசுவதை நிறுத்திவிட்டு தேசிய கீதம் பாடினார். சபாநாயகர் செல்வம் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது செல்போனில் பேசி கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்