வெள்ளத்தில் மிதக்கும் மும்பை...அடுத்த 3 நாட்கள்.. வெளியான ரெட் அலர்ட் வார்னிங்

x

வெள்ளத்தில் மிதக்கும் மும்பை...அடுத்த 3 நாட்கள்.. வெளியான ரெட் அலர்ட் வார்னிங்

மும்பையில் நேற்று கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழையால், பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகளில் வாகனங்கள் மிதந்தவாறு செல்லும் நிலையில், தண்டவாளங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மிக கனமழை பெய்யும் என மும்பை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மும்பை, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மும்பையில் உள்ள பள்ளிக்கூடங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்