மிதக்கும் மும்பை,புனே... வெறியாட்டம் ஆடும் வெள்ளம்... 70 பேர் படகுகளில் மீட்பு

x

மகாராஷ்ட்ராவில் கனமழைக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். புனே மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி ஒருவரும், மின்சாரம் தாக்கி மூவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் பெய்த கனமழையால், சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விமானம் ரத்து செய்யப்பட்டதற்கான முழு பணத்தையும் திரும்பத் தருவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. மும்பையில் ஏரிகள் நிரம்பி வழிவதால், சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புனே நிம்ப்ஜாநகர் பகுதியில், வெள்ளத்தில் சிக்கித்தவித்த குழந்தைகள், பெண்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோரை ரப்பர் படகுகள் மூலம் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்