239 பயணிகளோடு சென்ற ஏர் இந்தியா..நடுவானில் திக்..திக்.. தகவல் - பரபரப்பில் தலைநகர்

x
  • மும்பையில் இருந்து நியூயார்க் புறப்பட்ட ஏர் இண்டியா விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. மும்பையில் இருந்து நியூயார்க் புறப்பட்ட AI-119 ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விமான பாதுகாப்பு ஒழுங்குமுறை குழுவின் அறிவுறுத்தலின்படி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் உடனடியாக கீழே இறக்கப்பட்டு, விமானம் தனிமைப்படுத்தப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட விமானத்தையும், அதில் உள்ள பயணிகளின்
  • உடைமைகளையும் விமான பாதுகாப்பு குழுவினர் மற்றும்
  • வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனைக்கு
  • உட்படுத்தினர். விமானத்தில் 239 பயணிகள் இருந்ததாகவும், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்