"ஜம்மு காஷ்மீரின் சீரழிவுக்கு செல்வாக்கு மிகுந்த 3 குடும்பங்களே காரணம்"- மோடி பரபரப்பு பேச்சு

x

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை, நிச்சயம் பா.ஜ.க. நிறைவேற்றும் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதத்தின் நிழலின்றி, முதல்முறையாக தேர்தல் நடைபெற்று வருவதாக பெருமிதத்துடன் கூறினார். ஜம்மு - காஷ்மீரின் சீரழிவுக்கு, காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின், செல்வாக்கு மிகுந்த மூன்று குடும்பங்களே காரணம் எனக் குற்றம் சாட்டிய அவர், மக்களையும், அவர்களது நியாயமான உரிமைகளையும் வஞ்சிப்பது தான் அவர்களின் அரசியல் கொள்கை என்றும் விமர்சித்தார். ஜம்மு - காஷ்மீரில் அமைதியை நிலை நாட்ட தீவிரமாக பணியாற்றி வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இங்குள்ள பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறுவதில்லை எனவும் தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்கிற வாக்குறுதி நிச்சயம் நிறைவேறும் என்றும் அவர் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்