``நாடி, நரம்பு எல்லாம் ஊறிப்போய்..'' - பிரதமர் மோடிக்கு திடீரென வந்த கோபம்

x

அரியானா மாநிலம் பல்வல்லில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, எல்லா இடங்களிலும் பா.ஜ.க. அலை வீசுவதாலும், மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். காங்கிரஸ் நாட்டிலேயே மிகப்பெரிய தலித் விரோத கட்சி என்று குற்றம் சாட்டியவர், அம்பேத்கரை இரண்டு முறை காங்கிரஸ் தேர்தலில் தோற்கடித்தது எனவும் அம்பேத்கரின் புகைப்படத்தை நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வைப்பதற்கு கூட காங்கிரஸ் அனுமதிக்கவில்லை என்றும் விமர்சித்தார். காங்கிரசின் நாடி, நரம்புகளில் எல்லாம் ஊழல்தான் ஓடுவதாக விமர்சித்தவர், காங்கிரஸ் கட்சி இடைத்தரகர்கள் மற்றும் மருமகனுக்கான கட்சியாகிவிட்டது எனவும் சாடினார்.


Next Story

மேலும் செய்திகள்