ஒரே மேடையில் மகளுக்கும், பழங்குடி பெண்ணுக்கும் திருமணம் தந்தை ஸ்தானத்தில் அசத்திய ஊராட்சி தலைவர்

x

கேரளாவில் தனது மகளின் திருமண மேடையிலேயே, பழங்குடியின தம்பதியினருக்கு ஊராட்சி தலைவர் திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தணந்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி தலைவரான பிரகாஷ், தனது மகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். அதே மேடையில் சோமினி என்ற பழங்குடியின பெண்ணுக்கும், ராஜி மோகன் என்ற இளைஞருக்கும், மலைவாழ் மக்களின் சடங்குகளுடன் திருமணத்தை நடத்தி வைத்தார். இதனால் ஊராட்சி தலைவர் பிரகாஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்