ஒரே தீ விபத்தில் ஒட்டுமொத்தமாக கருகிய 118 கடைகள்... உள்ளே இருந்த உயிரினங்கள் இறந்ததால் அதிர்ச்சி

x

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் உள்ள சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் கருகி சேதடைந்தன. அங்குள்ள சத்துகாக் சந்தையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 14 ஆயிரம் சதுர அடி பரப்பிலான கரைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பாம்புகள், சிலந்திகள், சியாமிஸ் சண்டை மீன்கள், கோழிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகளும் தீயில் கருகி இறந்தன. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், 118 கடைகள் எரிந்து சாம்பலானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்