சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை | Ayyappan

x

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை நடைபெற உள்ளது. இந்நிலையில், பம்பை கன்னிமூல கணபதி கோயிலில், ஐயப்பனின் தங்க அங்கி, பக்தர்களின் வழிபாட்டுக்கு இன்று வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மதியம் ஒரு மணியில் இருந்து பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும். மாலை 3 மணியளவில், தலை சுமையாக தங்க அங்கி எடுத்துச் செல்லப்பட்டு, மாலை 5.30 மணியளவில் சரங்குத்தி சென்றடையும். மாலை 6.20 மணியளவில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். இரவு 7 மணிக்குப் பின்னர், பம்பையில் இருந்து பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்