அஜித் பவாரை எதிர்த்து களமிறங்கும் அண்ணன் மகன்... சூடு பறக்கும் மராட்டிய தேர்தல் களம்

x

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

288 தொகுதிகளில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட தொகுதிகளுக்கு அக்கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. பாஜக 99 வேட்பாளர்களை அறிவித்த வேளையில், சிவசேனா ஷிண்டே அணி 48 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. கோப்ரி-பச்பகாடி தொகுதியில் ஏக்நாத் சிண்டே போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கூட்டணியில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணி முதல்கட்டமாக 38 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மாநில துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் பாராமதி தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தொகுதியில் அஜித் பவார் அண்ணன் சீனிவாஸ் பவாரின் மகன் யுகேந்திர பவாரும் போட்டிக்கு தயாராவதால் களம் பரபரப்பாக்கியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்