"இந்தியாவிற்கு வலைவீசும் உலக நாடுகள்..?" எச்சரிக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் | RSS

x
  • விஜயதசமி தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநில​ம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் பூஜைகள் செய்தபின் உரையாற்றிய மோகன் பகவத், நமது நாடு வலுவாகவும், மரியாதையாகவும் மாறிவிட்டதை அனைவரும் உணர்வதாக தெரிவித்தார். உலகளாவிய சகோதரத்துவம், சுற்றுச்சூழல், யோகா மற்றும் பலவற்றைப் பற்றிய நமது கருத்துக்களை உலகம் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார். ஆனால், நமது உறுதியை சோதிப்பது போல் நாட்டை சீர்குலைக்க தீய சக்திகளால் சதிவலை பின்னப்படுவதாகவும், அவை எல்லா திசைகளிலிருந்தும் வேகத்தைப் பெறுவதாகவும் மோகன் பகவத் குற்றம் சாட்டினார். இளம் தலைமுறையினரிடையே வேகமாகப் பரவி வரும் போதைப் பழக்கம் சமூகத்தை பலவீனமாக ஆக்குவதாகத் தெரிவித்த மோகன் பகவத், OTT தளங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று கூறினார்

Next Story

மேலும் செய்திகள்