உயிருடன் இருப்பவரை இறந்ததாக சொன்ன வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை.. ஐகோர்ட் காட்டமான உத்தரவு

x

உயிருடன் இருக்கும் நபரை எப்படி இறந்ததாக அறிக்கை அளிக்கலாம் என நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரை, உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி, அவரது உறவினர் தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையருக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், கிருஷ்ணகுமார் இறந்து விட்டதாக தமிழக அரசு பதிலளித்துள்ளது. இதைக் குறிப்பிட்டு, கிருஷ்ணகுமாரை அகதிகள் முகாமில் இருந்து விடுதலை செய்யக் கோரி அவரது உறவினர் நாகேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, உயிரோடு இருக்கும் நபரை இறந்ததாக எப்படி அறிக்கை அளிக்கலாம் எனக் கேள்வி எழுப்பியதுடன், இதுசம்பந்தமாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 16 ம் தேதிக்கு தள்ளிவைத்தது.


Next Story

மேலும் செய்திகள்