பாதி ஆடையுடன் ரோட்டில் ரீல்ஸ்.. பார்த்ததுமே கண்ணை மூடிய மக்கள் - கடைசியில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட்

x

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் மக்கள் நடமாட்டமுள்ள சந்தை பகுதியில் குறைந்த ஆடைகளுடன் சுற்றித்திரிந்த பெண், அதனை அவரே இணையத்தில் வெளியிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில்,

இதற்கு மத்திய பிரதேசம் மாநிலம் பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா கண்டனம் தெரிவித்தார். இந்தூர் போன்ற கலாச்சாரமாந நகரத்தில் இதுபோன்ற அநாகரீகம் நடக்கக்கூடாது எனவும் அவர் கூறினார். மேலும் சில மகளிர் அமைப்புகளும் அந்த இளம் பெண் மீது புகார் தெரிவிக்க போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டன. இந்த நிலையில் அந்த பெண் இளம் பெண் ஒரு வீடியோவை வெளியிட்டு மன்னிப்புக் கோரியுள்ளார். பொது இடங்களில் இதுபோன்ற ஆடைகளை அணிந்திருக்கக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டதாகவும் அதற்காக தான் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்