3 வயது சிறுவனுக்கு கல்லீரல் தானம்.. - உச்சநீதிமன்றம் உத்தரவு

x

இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 வயது அமெரிக்க சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்லீரல் தானம் பெற அனுமதிக்க கோரி சிறுவன் ராஜ்வீர் சிங் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கோபன்னா, சுந்தரரேஷ் அடங்கிய அமர்வு, பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட 3 வயது அமெரிக்க சிறுவனின் உயிரை காப்பாற்றும் நோக்கில், அவரது மாமாவின் கல்லீரலை தானம் செய்ய அனுமதி அளித்தனர். மேலும், இந்த உத்தரவு இந்த வழக்கிற்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்