மேலும் 5 மொழிக்கு செம்மொழி அந்தஸ்து - மத்திய அரசு ஒப்புதல் | PM Modi | Thanthi TV

x

மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மேலும் 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பெங்காலி, அசாமி, பாலி மற்றும் பிரக்ரித் உள்ளிட்ட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ஏற்கனவே தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஓடியா உள்ளிட்ட மொழிகளுக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்