குவைத் தீ விபத்தில் சிக்கிய 8 தமிழர்கள் எங்கே..? என்ன ஆனார்கள்? பதற்றத்தில் தமிழகம்

x

குவைத் நாட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 7 தமிழர்கள் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலரின் நிலை குறித்து தகவல் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

குவைத் நாட்டில் தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் 25 தமிழர்கள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட போது 10 தமிழர்கள் வேலைக்கு வெளியே சென்றுவிட்ட நிலையில் மீதமுள்ள 15 பேர் தீ விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மங்காப் பகுதியில் உள்ள மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உடல்களை தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீ விபத்தில் சிக்கிய மீதமுள்ள 8 பேரின் நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் கவலை அடைந்துள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் தற்போது வரை 21 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குவைத் அரசு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்