குவைத் கோர தீ விபத்து - கண்ணீரோடு காத்திருக்கும் குடும்பத்திற்கு வந்த முக்கிய தகவல்

x

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு மீட்டு வருவதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய இணையமைச்சர் கே.வி.சிங், குவைத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்து வர இந்திய விமானப் படைக்கு சொந்தமான C-130J விமானம், குவைத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விமானம், உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்டது. அந்த விமானம், கொச்சி விமான நிலையம் வந்தடைந்த பிறகு, அங்கிருந்து, இறந்தவர்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்