"விட்டுட்டு போகாதீங்க டீச்சர்" சுற்றி நின்று கதறிய மாணவிகள் - பார்த்தாலே நம் கண்களும் குளமாகும்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் மருதேப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளியில், கலைச்செல்வி என்பவர் 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கங்காவரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு கலைச்செல்வி இடமாறுதல் பெற்றுள்ளார். இதையடுத்து மருதேப்பள்ளி பள்ளியில் சக ஆசிரியர்களையும், பள்ளி குழந்தைகளையும் சந்தித்து, கலைச்செல்வி விடைபெற சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த மாணவ மாணவிகள், பள்ளியை விட்டு செல்ல வேண்டாம் என்று கலைச்செல்வியை கட்டி பிடித்து கொண்டு அழுதனர். இந்த காட்சிகள் காண்போரை நெகிழ செய்தது.


Next Story

மேலும் செய்திகள்