நாட்டை உலுக்கிய பெண் மருத்துவர் மரணம் - ஹர்பஜன் சிங் வெளியிட்ட ஆவேச வீடியோ

x

வீடியோ வெளியிட்டுள்ள ஹர்பஜன் சிங், கொல்கத்தாவில் நடந்த சம்பவம் மிகவும் தவறானது என்று தெரிவித்துள்ளார். அவருக்கு நீதி கிடைக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள ஹர்பஜன், இந்த விவகாரத்தை அரசியல் பிரச்சினை ஆக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். விரைவில் நீதி கிடைக்க, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க ஆளுநர், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற கோடூர செயல்களை செய்தால், என்ன நடக்கும் என்பதை உணரும் அளவுக்கு கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்