கொல்கத்தா பெண் டாக்டர் கொலை.. மம்தாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

#kolkata | #mamatabanerjee

கொல்கத்தா பெண் டாக்டர் கொலை.. மம்தாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், இளம் மருத்துவர்கள் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்தும், மருத்துவர்கள் உட்பட சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை உறுதி செய்ய வலியுறுத்தியும், இளம் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜியுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின் போராட்டத்தை கைவிட்டு, கடந்த மாதம் பணிக்கு திரும்பினர். இந்நிலையில், மருத்துவர்களின் பாதுகாப்பு, நோயாளிகள் சேவை போன்றவற்றில் அரசிடமிருந்து உறுதியான நடவடிக்கைகள் கிடைக்கப்பெறும் வரை, வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்வதாக இளம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாநில சுகாதாரச் செயலாளரை அப்பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்