கொல்கத்தா பெண் டாக்டர் கொலை.. அதிகாலை 4.03 மணிக்கு நடந்தது என்ன? - நெஞ்சம் பதறும் பகீர் தகவல்

x

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் ஆகஸ்ட்டில் பாலியல் வன்கொடுமை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சஞ்சய் ராய்

என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 5 மருத்துவர்களிடமும், சஞ்சய் ராயிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், இரவு நேர இடைவெளியின் போது கருத்தரங்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மருத்துவரை, கொல்கத்தா காவல்துறையில் தன்னார்வலராக பணிபுரிந்த சஞ்சய் ராய் வல்லுறவு செய்து கொலை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சஞ்சய் ராய் சம்பவ இடத்துக்கு அதிகாலை 4.03 மணிக்கு சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் பெயர் மட்டும் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளதால் கூட்டு வல்லுறவு நடைபெறவில்லை என்பது தெளிவாகிறது


Next Story

மேலும் செய்திகள்