நாட்டையே உலுக்கிய மருத்துவர் கொலை.. ஹாஸ்பிட்டலில் இறங்கிய அதிரடி படை

x

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதனிடையே, சம்பவம் நடந்த மருத்துவமனையில், மருத்துவர்கள் மீண்டும் பணியைத் தொடங்கும் வகையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதன்படி, ஆர்ஜி கர் அரசு மருத்துவமனை, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்