கண்ணீரில் நின்ற அபிஜித் ஓடோடி வந்த அஜ்மல்... கலங்க வைத்த முகாம் நட்புபுதைபூமியில் முளைத்த நம்பிக்கை

x

வயநாடு நிலச்சரிவில் நண்பர்களை இழந்த பள்ளி மாணவர் அபிஜித், முகாமில் தனது குடும்பத்தினருடன் மேப்பாடி முகாமில் தங்கியுள்ளார். இந்நிலையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வந்த அஜ்மல் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பள்ளிக்கூடம் மற்றும் நண்பர்களை இழந்து வேதனையில் தவிக்கும் அபிஜித்தை நண்பனாக ஏற்ற அஜ்மல், துயரத்தில் இருந்து அவரை மீட்கும் வகையில், கேரம்போர்டு வாங்கி அதில் இருவரும் விளையாடுகின்றனர். தனது நண்பன் அபிஜித்துக்கு தேவையான உதவிகளை செய்ய இருப்பதாக அஜ்மல் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்