நாடே திரும்பி பார்த்த ஒரு நிச்சயதார்த்தம்.. 5 மாதங்களுக்கு பின் அதிர்ச்சி கொடுத்த திருநங்கை

x

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சீமா வினித். பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான இவருக்கும், நிஷாந்த் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இவர்களது திருமணம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக, சீமா வினித் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இருவரும் பிரிவதாக குறிப்பிட்டுள்ள அவர், தங்களது உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு ஊடகங்கள் மற்றும் நண்பர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்