தாயை இழந்த பச்சிளங்குழந்தை.. தாய்மையை கொச்சைப்படுத்திய இளைஞர்கள்.. நேரில் சென்று அடித்த மக்கள்

x

வயநாட்டில் தாயை இழந்த பச்சிளங் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த இளம் பெண்ணுக்கு எதிராக ஆபாச கருத்து பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணின் தாய்மை உணர்வைப் போற்றி பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில் சில இளைஞர்கள் ஆபாசமாக கருத்து பதிவிட்டு இருந்தனர். அவர்களுள் செர்ப்புளசேரி பகுதியைச் சேர்ந்த சுகேஷ் பி.மோகனன் என்பவரும் ஒருவர்... அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இதேபோல் ஆபாச கருத்து பதிவிட்ட கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்பவரை இளைஞர்கள் சிலர் நேரில் சென்று தர்ம அடி கொடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்