இறுதியாக தெரிந்து உயிர்த்துடிப்பு அறிகுறி.. முண்டகையில் புதைந்தவர்களுக்கு இன்னும் உயிர் இருக்கா?

x

கேரள மாநிலம் முண்டகை நிலச்சரிவில் சிக்கியவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பது குறித்த தெர்மல் இமேஜிங் அறிக்கை, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தவர்கள் இனிமேலும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என ஏற்கனவே கேரள அரசு மற்றும் ராணுவம் கூறியிருந்தது. எனினும், அதை உறுதி செய்வதற்காக, கொச்சியை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் தெர்மல் இமேஜிங் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. அந்த அடிப்படையில், அந்த நிறுவனம் ஆளில்லா விமானம் மூலம் தெர்மல் இமேஜிங் சோதனை மேற்கொண்டது. அதுகுறித்த அறிக்கையில், பேரிடர் பாதிப்பு பகுதியில் சிக்கிய மனிதர்களில் யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்