வயநாடு கோரத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளை தர முடியுமா?.."அம்மா, அப்பாவாக நாங்க இருக்கோம்"

x

கேரள மாநிலம் வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவை தொடர்ந்து, அங்கு நடைபெற்று வரும் மீட்பு பணிகள் தொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது கருத்து பதிவிட்டு வருகிறார். அவரது பதிவுக்கு கீழே சிலர், பெற்றோர்களை இழந்த குழந்தைகள் இருந்தால் தங்களுக்கு தர முடியுமா என்றும், தங்களால் அந்த குழந்தைகளை வளர்க்க முடியும் என்றும் பதிவிட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் வீணா ஜார்ஜ், தங்களின் நல்ல மனதுக்கு இதயபூர்வமான நன்றி என்றும், அரசு குழந்தைகள் நல சட்டத்தின்படி ஏற்கனவே தத்தெடுக்க பதிவு செய்திருந்தால் முன்வரலாம் என்றும் பதிலளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்