இந்தியாவை உலுக்கிய பாலியல் விவகாரம்.. கொல்கத்தா நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்

x

கேரள திரைப்பட இயக்குனர் ரஞ்சித் மீது பாலியல் புகார் அளித்த நடிகை மேற்கு வங்காள நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் அளித்தார்.

கேரளாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரும், கேரளா திரைப்பட அகாடமி தலைவருமான ரஞ்சித், தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். இதன் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கேரள போலீசார் அழைப்பு விடுத்தனர். ஆனால், அவர் கேரளாவிற்கு வர மறுத்த நிலையில்,

தற்போது மேற்கு வங்காளத்தில் இருந்து ஆன்லைன்மூலமாக

ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். கொல்கத்தா அமர்வு நீதிமன்றத்தில், பிரிவு 164 படி இரகசிய வாக்குமூலம் அளித்தார். 2009ஆம் ஆண்டு இயக்குனர் ரஞ்சித் படப்பிடிப்புக்காக வரவழைத்து, பாலியல் ரீதியாக

துன்புறுத்தியதாக அவர் கூறியிருந்தார். எதிர்ப்பு தெரிவித்ததால், அவருக்கு இணங்காததை மனதில் கொண்டு நடிக்க வாய்ப்பு மறுத்த நிலையில், மேற்கு வங்காளத்திற்கு திரும்ப சென்றதாகவும் ரஞ்சித் மீது

குற்றஞ்சாட்டியிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்