இரவில் கேட்ட அலறல் சத்தம் -பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு நடந்த கொடூரம்- வெளியான பகீர் பின்னணி

x

கேரளாவின் கொச்சி வைபின் பகுதியில் பெண் ஆட்டோ ஓட்டுனர் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலம் கொச்சி வைபின் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு பெண் ஆட்டோ ஓட்டுனர் ஜெயாவின் ஆட்டோவில் ஏறிய மூவர், கடற்கரையில் தங்களது கார் பழுதாகி நிற்பதால் அங்கு செல்லுமாறு கூறியுள்ளனர். அங்கு சென்றதும் மூவரும் சேர்ந்து ஆட்டோ ஓட்டுனர் ஜெயாவை கொடூரமாக தாக்கியுள்ளனர். ஜெயாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதுகுத்தண்டு மற்றும் விலா எலும்புகளில் பலத்த காயமடைந்த ஜெயா, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் விசாரணையில் , குடும்ப தகராறு காரணமாக ஜெயாவின் சொந்த அத்தை மகளின் இரண்டாவது கணவர் சஜீஷ், ஆள் வைத்து ஜெயாவை தாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது

சஜீஷ் மற்றும் தாக்குதல் நடத்திய மூவர் தலைமறைவாக உள்ள நிலையில், சஜீஷின் மனைவி பிரியங்கா மற்றும் அவரது நண்பர் விதுன் தேவ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்