"பிரபல இயக்குனர் பலமுறை பலாத்காரம் செய்தார்" - திரைத்துறையை உலுக்கிய இளம் நடிகை

x

பிரபல மலையாள இயக்குநர் ஒமர் லுலு மீது நடிகை பாலியல் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

மலையாள சினிமாவில் பிரபல டைரக்டர்களில் ஒருவர் ஒமர் அப்துல் வஹாப் என்ற ஒமர் லுலு.... ஹேப்பி வெட்டிங், சங்ஸ், ஒரு அடார் லவ், தமாக்கா, நல்ல சமயம் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள இவர், ஏராளமான இசை ஆல்பங்களையும் தயாரித்துள்ளார். இந்நிலையில் மலையாள இளம் நடிகை ஒருவர் இவர் மீது கொச்சி நெடும்பாசேரி போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி பலமுறை ஒமர் லுலு தன்னை பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஒமர் லுலு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆனால் நடிகையின் இந்தப் புகாரை ஒமர் லுலு மறுத்துள்ளார். தனக்கும், அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது உண்மை தான் என்றும், இப்போது தொடர்பை தான் துண்டித்து விட்ட நிலையில், பணம் பறிக்க பொய் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்