மனித வெடிகுண்டு என மிரட்டிய நபர்..! ஏர்போர்ட்டில் அலறிய பயணிகள்..! அதிரடிகாட்டிய போலீஸ்.. கொச்சியில் பரபரப்பு

x

கொச்சி விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு என மிரட்டிய பயணியால் பரபரப்பான சூழல் நிலவியது.

கொச்சி விமானநிலையத்தில் இருந்து மாலை 3.50 மணிக்கு மும்பைக்கு செல்லும் விஸ்தாரா விமானத்தில் பயணிகளின் சோதனையின் போது, மகாராஷ்டிராவை சேர்ந்த விஜய் மந்தானி என்பவர் தான் ஒரு மனித வெடிகுண்டு என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் அவரை பிடித்து சோதனை செய்த போது, ஏதும் சிக்காததால், உரிய விசாரணை நடத்துவதற்காக நெடும்பாசேரி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனால் விஸ்தாரா விமானம் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. ஞாயிறன்று கொச்சி விமான நிலையத்தில் பல்வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்