என்கவுண்டர் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சி.. ஒரே சத்தத்தால் அலறி அடித்து ஓட்டம்

x

கேரளாவில் ஏ.டி.எம் மையத்தில் மீண்டும் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திற்கு உட்பட்ட வள்ளிக்குந்நம் பகுதியில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் உள்ளது. இங்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருடன், பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு, எந்திரத்தை உடைக்க முயன்றபோது அபாய ஒலி ஒலிக்கத்தொடங்கியது. இதனால் திருடன் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தப்பியோடிய நிலையில், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், கைரேகை உள்ளிட்ட தடயங்களைச் சேகரித்து, திருடனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் ஏ.டி.எம். பணம் கொள்ளை வழக்கில் வடஇந்தியர்கள் கைதான சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதற்குள், ஆலப்புழாவில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்