பயங்கரமாக மோதி ஸ்கூட்டரை 8 கி.மீ இழுத்து சென்ற லாரி - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் மேவாடாவில், சாலையில் ஸ்கூட்டரை நிறுத்தி பேசிக்கொண்டிருந்த இருவர் மீது அந்த பகுதியை வேகமாக கடக்க முயன்ற லாரி மோதியது. இதில் இருவர் படுகாயமடைந்தனர். லாரியின் முன் பக்க சக்கரத்தின் அடியில் சிக்கிய ஸ்கூட்டரை, எட்டு கிலோ மீட்டர் இழுத்துச் சென்ற அந்த லாரி, மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. தப்பியோடிய லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்