திடீரென கடல்நீரை உறிஞ்சிய வானம் - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுக பகுதியில் கடல்நீரை ஆகாயம் உறிஞ்சும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கேரள எல்லை பகுதியான விழிஞ்சம் கடற்கரை துறைமுக பகுதியில் திடீரென கடல்நீரை ஆகாயம் உறிஞ்சுவது போல் ஒரு சுழி தோன்றி அதன் வழியாக கடல்நீர் மேலே எழும்பி சென்றுள்ளது. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது .இதே போன்ற நிகழ்வு இதற்கு முன்பும் இந்த பகுதிகளில் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்