கொப்பளிக்கும் கடல்...! - மக்களுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை

x
  • கேரள கடலோர பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல், நாளை (புதன்கிழமை) நள்ளிரவு வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரள கடலோர பகுதிகளில், கடல் அலை எழுவதற்கு வாய்ப்புள்ளதாலும், கள்ளக் கடல் நிகழ வாய்ப்புள்ளதாலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மாற்று இடங்களுக்குச் சென்று தங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறு படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், கடலோர பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது. மீனவர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என யாரும், மறுஅறிவிப்பு வரும் வரை கடற்கரை பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்