திருமண விழாவில் போட்டோ கிராபர்களுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்... தீயாய் பரவும் ஷாக் வீடியோ

x

கேரளாவில் திருமண நிகழ்வில் கலந்துக்கொண்ட புகைப்பட கலைஞர்களை மணமகளின் உறவினர்கள் காரில் பின்தொடந்து சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மாங்குளத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற புகைப்பட கலைஞர்கள் ஜெரின் மற்றும் நிதின் ஆகியோரை பெண்வீட்டார் மதுபோதையில் தாக்கியாக கூறப்படுகிறது. இதனை இருவரும் மணமகன் உறவினர்களுக்கு கூறியதால் இருவீட்டாருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மணமகளின் உறவினர்கள் போட்டோகிராபர்கள் சென்ற வாகனத்தை வழிமறித்து இருவரையும் தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்