எதுவுமே நடக்காதது போல செல்லும் கொள்ளையர்கள் - என்கவுன்ட்டருக்கு முன் வெளியான ஷாக் சிசிடிவி

x

கேரளாவின் திருச்சூரில் 3 ஏடிஎம்களில் கொள்ளையடித்து விட்டு வடமாநில கொள்ளையர்கள் பந்நியங்கரை சுங்கச்சாவடியை கடந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த கண்டெய்னர் லாரி தமிழகம் வழியே தப்ப முயன்ற நிலையில் நாமக்கல் போலீசார் விரட்டிப் பிடித்தனர்... ஒரு கொள்ளையன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு கொள்ளையன் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் கொள்ளையடித்து விட்டு கண்டெய்னர் லாரி திருச்சூர் மாவட்டத்திற்குட்பட்ட பந்நியங்கரை சுங்கச்சாவடியை கடந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சாதாரணமாக சரக்கு ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் லாரி போல கொள்ளையர்கள் லாரி கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்