இன்ஸ்டா பிரபலத்தின் உயிரை பறித்த `பாலோவர்ஸ்'... பார்த்து பார்த்து கதறி அழுத நண்பர்கள்

x

திருக்கண்ணபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்... இன்ஸ்டாகிராமில் ஆர்வமாக இருக்கும் இவர் ஏராளமான வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார்... அந்த மாணவிக்கு திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடைய அறிமுகம் இன்ஸ்டா மூலம் கிடைத்துள்ளது... முதலில் நட்பாகத் துவங்கி உறவு காதலாக மாறிய நிலையில், சில நாள்களுக்கு முன்பு அந்த மாணவி காதலைக் கைவிட்டு இளைஞருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.. இந்த தகவல் இருவரது சமூக வலைதள நண்பர்களிடையே பரவிய நிலையில், அந்த மாணவியை சிலர் தொடர்ந்து விமர்சனம் செய்து அவருக்கு எதிராக சைபர் தாக்குதல் தொடுத்து வந்தனர். இதனால் மனமுடைந்த மாணவி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ரார். அவரை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவி தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சைபர் தாக்குதல் தொடுத்தவர்களைத் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்