111 வயது மூதாட்டி வாக்கு செலுத்த வீட்டிலேயே அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி.. | Thanthitv

x

கேரளாவில் 111 வயது மூதாட்டி வாக்களிக்க, அவரது வீட்டிலேயே தற்காலிக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. கேரளாவில் 2ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கோத்து பகுதியில் 111 வயது மூதாட்டி ஒருவர் வாக்களிக்க, அவரது வீட்டிலேயே தற்காலிக வாக்குச்சாவடி மையம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வாக்களித்த மூதாட்டிக்கு, மாவட்ட ஆட்சியர் சார்பில் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்