பஸ் டிரைவருக்கு விழுந்த அடி மது போதையில் தாக்கிய மூவர் தட்டி தூக்கிய போலீஸ்

x

தமிழகத்தில் உள்ள உடுப்பன் சோலையில் இருந்து கேரளாவின் மூணாறு நோக்கிச் சென்ற கேரள அரசு பேருந்து ஒன்று பூப்பாறையில் நிற்காததால் ஆத்திரமடைந்த மூன்று பேர் குடிபோதையில் ஆட்டோவில் பேருந்தை பின் தொடர்ந்து சென்றனர். இடுக்கி யானைக்கரை அருகே கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தை மறித்த போதை கும்பல், அதன் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை சரமாரி தாக்கினர். புகாரின் பேரில், பூப்பாறையைச் சேர்ந்த செல்லதுரை, அன்சார், குமரேசன் ஆகியோர் மீது சாந்தன்பாறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்கள் வந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்