நடந்து சென்ற சிறுவன் மழைநீர் வடிகாலில் மரணம்.. கர்நாடகாவை உலுக்கிய காட்சி

x

கர்நாடகாவில் மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாவேரி நகரை சேர்ந்த 12 வயது சிறுவன், தேங்கி நின்ற மழைநீரில் நடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக வடிகால் கால்வாயில் தவறி விழுந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுமார் ஒருமணி நேரம் கழித்து சிறுவனை சடலமாக மீட்டுள்ளனர். நகரசபை அதிகாரிகளின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்திருப்பதாக கூறி, சிறுவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்