காதலனை நம்பி சென்ற காதலி... நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து சீரழித்து கொன்ற கொடூரன்

x

கர்நாடகாவில் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகாவின் பீதர் மாவட்டத்தில் நேர்ந்த இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. முக்கிய குற்றவாளியான ராஜேஷ் மாலே உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். இதில் ராஜேஸ் மாலேவுடன் அப்பெண் கடந்த சில மாதங்களாக செல்போனில் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. ராஜேஸ் மாலே அழைத்ததின் பேரில், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நள்ளிரவு 3 மணியளவில் வீட்டை விட்டு சென்ற பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து ராஜேஸ் மாலே பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது குறிப்பிடத்தக்க நிலையில், கைதான மூவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்