திடீரென தீப்பற்றி எரிந்த ஆலை - தீயணைப்பு வீரர்களை மிரட்டும் காட்சி

x

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் பகுதியில், தனியார் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள், பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்