திடீரென மிரண்டு ஓடிய யானை.. பயத்தில் சிதறி ஓடிய மக்கள் - அதிர்ச்சி காட்சி

x
  • கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் தசரா விழாவிற்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த யானை, திடீரென மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீரங்கப்பட்டினம் தசரா விழாவிற்காக 3 யானைகள் அழைத்துவரப்பட்டுள்ளன. தசரா தினத்தன்று, மக்களை கண்டு யானைகள் மிரள கூடாது என்பதற்காக, தினசரி ஊர்வலம் செல்லும் பாதையில் யானைகளுக்கு நடை பயிற்சியளிப்பது வழக்கம். அதன்படி, பயிற்சியில் ஈடுபட்டிருந்த லட்சுமி என்ற யானை திடீரென மிரண்டு ஓடியது. யானையை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல், பாகன்கள் திணறிய நிலையில், பொதுமக்கள் செய்வதறியாது, அங்குமிங்கும் தப்பி ஓடினர்.

Next Story

மேலும் செய்திகள்