கடன் அடைக்காததால் வீடு புகுந்து குழந்தைகள் கடத்தல்?.. பட்டப்பகலில் பகீர் சம்பவம்.. ஓடி வந்த நாய்

x

கடன் அடைக்காததால் வீடு புகுந்து குழந்தைகள் கடத்தல்?.. பட்டப்பகலில் பகீர் சம்பவம்.. ஓடி வந்த நாய்

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம், கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திரைப்படத்தில் வரும் காட்சிபோல் நடந்த இந்த சம்பவம், கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அத்தானி பகுதியில் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் 2 குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு வெளியே . பின்னர், அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறில் அவர்கள் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து குழந்தைகளின் தந்தை, அத்தானி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, தனிப்படை போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தைகளைத் தேடி வருகின்றனர். குழந்தைகளின் தந்தை சிலரிடம் கடன் வாங்கி விட்டு அதை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பணப் பரிவர்த்தனையால் ஏற்பட்ட தகராறில் குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றர்.


Next Story

மேலும் செய்திகள்