டாக்டர்கள் சொன்ன வார்த்தை...இறந்த தந்தையை பைக்கில் எடுத்து சென்ற மகன்கள் - தீயாய் பரவும் காட்சிகள்

x

கர்நாடகாவில் ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் முதியவர் உடலை மோட்டார் சைக்கிளில் மகன்கள் தூக்கி சென்ற அவலம் நடைபெற்றுள்ளது. துமகூரு மாவட்டம் ஒசகோட்டே பகுதியை சேர்ந்தவர் குடுகுல்லா ஹொன்னப்பா. இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள அரசு ஆஸ்பத்திக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குடும்பத்தினர் அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வர ஆஸ்பத்திரியில் இருந்த ஆம்புலன்சை கேட்டுள்ளனர். ஆனால் டாக்டர்கள் ஆம்புலன்ஸ் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அவரது மகன்கள் 2 பேர், ஹொன்னப்பாவின் உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து வீட்டிற்கு தூக்கி சென்றனர். இந்த வீடியோ வைரலாகி உள்ளநிலையில், ஆம்புலன்ஸ் கொடுக்க மறுத்த அரசு ஆஸ்பத்திரி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது....


Next Story

மேலும் செய்திகள்