மூக்கைத் துளைத்த `மீன்' குழம்பு... சப்புக்கொட்ட வைத்த கேக்... ருசியான ஒரு திருட்டு... வாக்குமூலத்தால் விழுந்து விழுந்த சிரித்த போலீசார்

x

கன்னியாகுமரியில் திருட வந்த இடத்தில் மீன் குழம்பு கேக் சாப்பிட்டு விட்டு சாவகாசமாக திருடன் திருடிச் ஏற்படுத்தியுள்ளது... காமராஜர் சாலை பகுதியில் வசித்து வரும் நாகம்மாள் வீட்டில் இல்லாத சமயத்தில் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் 17 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளார்... திருடன் சமையல் அறையில் இருந்த மீன் குழம்பு, கேக் ஆகியவற்றை ஆற அமர சாப்பிட்டு விட்டுத் திருடிச் சென்ற நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய பிரபின் என்பவரை கைது செய்தனர். வாசம் மூக்கைத் துளைத்ததால் மீன் குழம்பை சாப்பிட்டதாகவும், பக்கத்திலேயே கேக் இருந்ததால் அதையும் சாப்பிட்டு விட்டு பிறகு திருட்டில் ஈடுபட்டதாக போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளது சிரிப்பை வரவழைத்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்