கல்வராயன் மலையில் எதிர்பாரா நேரம் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பல பேர் உயிரிழந்த நிலையில்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் ஒரு சொட்டு கூட சாராயம் இல்லை என்ற அளவுக்கு போலீசார் தீவிரமாக சாராய ரெய்டில் ஈடுபட்டனர்.

கல்வராயன் மலையில் கடந்த சில மாதங்களாக சாராயம் இல்லாமல் இருந்ததாக போலீசார் பெருமூச்சு விட்டு வந்த நிலையில்,

கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக சேராப்பட்டு, வேங்கோடு, சோத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சாராய ஊரல்களை கைபற்றி, சாராய வியபாரிகளை கைது செய்து வருகிறார்கள்

சேரப்பட்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்து, அவர் பதுக்கி வைத்த 80 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்து அழித்தனர்

சமீபத்தில் 500 லிட்டர் வரை சாராய உரல்களை கண்டுபிடித்து, 200 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்